நவவியின் இராஜினாமாவும் புத்தளம் மக்களும் - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

நவவியின் இராஜினாமாவும் புத்தளம் மக்களும்

2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்தல் பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் புத்­தளம் மாவட்­டத்­தி­லி­ருந்து ஒரு முஸ்லிம் வேட்­பாளர் கூட பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­க­வில்லை. விகி­தா­சார தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்பு புத்­தளம் மாவட்டம் தமக்­கென ஒரு முஸ்லிம் எம்.பி.யை பெற்­றுக்­கொள்ள முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றது.

1947 ஆம் ஆண்டு நடை­பெற்ற இலங்­கையின் முத­லா­வது பாராளுமன்ற தேர்­தலின் போது, இலங்­கையின் முத­லா­வது பாராளுமன்ற உறுப்­பினர் என்ற பெயரை புத்­தளம் தொகுதி பாராளு­மன்ற உறுப்­பினர் மர்ஹூம் எச்.எஸ். இஸ்­மையில் பெற்றுக் கொண்டார். முத­லா­வது பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­காக வேட்­பு­மனு கோரப்­பட்ட போது புத்­தளம் தொகு­தியில் போட்டி வேட்­பாளர் யாரும் இல்­லாத நிலையில் இலங்­கையின் முத­லா­வது எம்.பி. புத்தளம் தொகு­திக்கு கிடைக்­க­பெற்றார்.

இறு­தி­யாக நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுத்தீன் விடுத்த வேண்டுகோளின் அடிப்­ப­டையில் எம்.எச்.எம். நவவி ஐ.தே.கட்சி பட்டி­யலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டார். தேர்தல் முடி­வு­களின் அடிப்­ப­டையில் புத்­தளம் மாவட்­டத்தில் ஆளும் கட்­சியில் ஐ.தே.கட்சி சார்­பாக ஐந்து உறுப்பினர்­களே பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கினர். நவவி 33,487 வாக்­கு­களைப் பெற்று ஆறா­வது இடத்தில் காணப்­பட்டார். 1931 வாக்கு­களை குறை­வாகப் பெற்­றதன் கார­ண­மாக நவவி பாராளுமன்­றத்­திற்கு தெரி­வாகும் வாய்ப்பை இழந்தார்.

எனினும் அமைச்சர் ரிஷாத் தான் புத்­தளம் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கினை காப்­பாற்றி நவ­வியை தேசிய பட்­டியல் மூலம் எம்.பி.யாக்­கினார். இதன் மூலம் புத்­தளம் மாவட்­டத்­திற்கு குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நித்­தித்­துவம் கிடைக்­கப்­பெற்­றது.

மர்ஹூம் எம்.எச்.எம். நெய்னா மரைக்­கா­ருக்குப் பின்னர் புத்­தளம் மாவட்­டத்­ததில் எந்த ஒரு முஸ்லிம் வேட்­பா­ளரும் வெற்றி பெற்று எம்.பி.யாக­வில்லை. புத்­தளம் தொகுதி முஸ்லிம் எம்.பி. ஒருவருக்காக ஏங்கி நிற்கும் நிலையில் இன்றும் காணப்படுகின்றது. 

1994 இல் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் புத்­தளம் டாக்டர் ஐ.எம். இல்­லியாஸை யாழ். மாவட்ட எம்.பி. யாக்கினார். அதன் பின்பு முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய பட்­டியல் மூலம் கே.ஏ. பாயிஸை புத்­த­ளத்­திற்கு எம்.பி. யாக்­கினார். இறு­தி­யாக அமைச்சர் ரிஷாத் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மூலம் நவ­வியை தேசிய பட்­டியல் எம்.பி.யாக்கினார். 

நவ­வியை தேசி­யப்­பட்­டியல் மூலம் எம்.பி.யாக்­கி­யது தொடர்பில் பல் வகை­யான எதிர்ப்புக் குரல்கள் ஆரம்பம் முதல் ஒலித்துக் கொண்டே இருந்­தன. அந்த குரல்கள் ஓங்கி ஒலித்து நவவி தனது எம்.பி. பதவியை தற்­போது இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

புத்­தளம் மாவட்­டத்­திற்கு சிறு­பான்மை மக்­க­ளுக்­காக குரல் கொடுக்க ஒரு எம்.பி. இருப்­பதை எண்ணி புத்­தளம் மாவட்ட முஸ்லிம், தமிழ் மக்கள் மாத்­தி­ர­மன்றி சிங்­கள மக்­களும் சந்தோஷமாக இருக்கும் நிலையில் நவ­வியின் எம்.பி. பதவி இல்லாமல் போவதை எண்ணி அம் மக்கள் பெரும் கவ­லையில் ஆழ்ந்­துள்­ளனர். 

தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள். காணப்படு­கின்­றனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் அப்­துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். தெளபீக் மட்­டக்­க­ளப்பு மாவட்டத்தில் எஸ். அமீர் அலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், அலிசாஹிர் மெள­லானா ஆகியோர் எம்.பி.க்களாக காணப்­பட அம்பாறை மாவட்­டத்தில் பைஸல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்..ஐ.எம். மன்சூர், நஸீர் ஆகியோர் எம்.பி.களாக காணப்படுகினறனர்.

வன்னி மாவட்­டத்­திற்கு ரிஷாத் பதி­யுத்தீன், காதர் மஸ்தான் ஆகியோர் எம்.பி.களாக உள்­ளனர். கண்டி மாவட்­டத்­திற்கு ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம் ஆகிய இரு­வரும் எம்.பி.களாக இருக்கும் அதே­வேளை கேகாலை மாட்­டத்­திற்கு கபீர் ஹாசீமும் அனு­ரா­த­புர மாவட்­டத்­திற்கு ஏ.ஆர். இஷாக்கும் எம்.பி.யாக உள்­ளனர்.

முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், பைஸல் முஸ்­தபா, ஏ.எச்.எம்.பெளஸி ஆகிய நால்­வரும் கொழும்பு மாவட்­டத்தில் எம்.பி,க்களாக உள்­ளனர். புத்­தளம் மாவட்­டத்தில் எம்.எச்.எம். நவவி எம்.பி.யாக இருந்தார். இவர்­களில் தேர்தல் மூலம் தெரி­வாகி பாராளு­மன்றம் சென்­ற­வர்கள் 15 பேர், தேசிய பட்­டியல் மூலம் பாராளு­மன்றம் சென்­ற­வர்கள் 6 பேர். மொத்தம் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் தற்­போ­தைய பாரா­ளு­ம­ன்­றத்தில் காணப்­ப­டு­கி­ன­றனர். மொத்த எம்.பி.க்கள் 21 பேரில் கிழக்கு மாகா­ணத்­திற்கு 10 எம்.பி.க்கள் காணப்­ப­டு­கின்­றனர்

வட கிழக்­கிற்கு வெளியே முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் ஒரு தொகு­தி­யாக புத்­தளம் தொகு­தியும் காணப்­ப­டு­கின்­றது கடந்த மூன்று தசாப்த கால தேர்தல் வர­லாற்றில் புத்­தளம் தொகு­திக்கு விகி­தா­சார தேர்தல் முறை மூலம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்­லாத நிலையில் தற்­போ­தைய அர­சியல் சூழ் நிலையில் நவவி தனது எம்.பி. பத­வியை இரா­ஜி­னாமா செய்­தது தொடர்பில் புத்­தளம் மக்கள் பெரும் குழப்­ப­ம­டைந்த நிலையில் காணப்­ப­டு­கின்­றனர். 

பாரா­ளு­மன்ற தேர்தல் முடி­வ­டைந்து முதல் வரு­டத்தில் நவ­விக்கு தேசிய பட்­டியல் மூலம் எம்.பி. பதவி தரு­வ­தாக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் கூறிய பிர­காரம் நவ­விக்கு எம்.பி. பத­வியை வழங்கி வைத்தார். அதற்­காக புத்­தளம் மக்கள் அமைச்சர் ரிஷா­திற்கு நன்றி கடன்­பட்­டுள்­ளனர்.

எது எவ்­வாறு இருப்­பினும் இவ்­வ­ருடம் நடை­பெற இருப்­ப­தாக எதிர்பார்க்­கப்­படும் வடமேல் மாகாண சபை தேர்தல் அடுத்தடுத்த, வரு­டங்­களில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகி­ய­வற்­றினை புத்­தளம் மாவட்ட முஸ்லிம் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வர் என்­பது தொடர்பில் பல்­வேறு சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. 

ஏனெனில் இறு­தி­யாக நடை­பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாரா­ளும­ன்ற தேர்­தல்­களின் போது புத்தளம் மாவட்டத்திலுள்ள ஐந்து தொகு­தி­க­ளிலும் புத்­தளம் தேர்தல் தொகுதி ஐ.தே. கட்சி பெரும்­பான்மை வாக்­கு­களால் வெற்றி பெற்ற போதும் புத்­தளம் தொகுதி முஸ்­லிம்­க­ளுக்கு பெரி­தாக எதுவும் கிடைத்ததாகத் தெரி­ய­வில்லை.

பொது­வாக தேர்தல் ஒன்­றினை எதிர் கொள்­கின்ற போது அர­சியல் அதி­கா­ரத்­துடன் தேர்தல் களத்தில் குதிப்­பது என்­பது தேர்தல் வெற்றிக்கு சாத­க­மாக அமையும். அடுத்த தேர்­தல்­களின் போது பாரா­ளு­மன்ற தேர்தல் அதி­காரம் புத்­தளம் மாவட்ட முஸ்லிம்களுக்கு இல்­லாத நிலையில் தேர்தல் வெற்­றிக்­காக கடுமை­யாக உழைத்து தமது அர­சியல் அதி­கா­ரத்­தினை புத்­தளம் மாவட்ட முஸ்­லிம்கள் தக்கவைத்துக் கொள்­வார்­களா என்­பது சந்தேகமே.

அதே போன்று எந்த ஒரு தேர்தல் தொகு­திக்கும் தனக்­கென ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இருக்கும் போது அந்த தொகு­திக்கு கிடைக்கும் அபி­வி­ருத்தி பணி­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. நமக்கென ஒரு எம்.பி. இல்­லாத நிலையில் நமது அபி­வி­ருத்­திக்கு அடுத்த தேர்தல் தொகுதி எம்.பி. யை எதிர்­பாக்கும் நிலையை. அதனை கடந்த மூன்று தசாப்த விருப்­பு­வாக்கு வர­லாற்றில் புத்­தளம் தொகுதி முஸ்­லிம்கள் அனு­ப­வித்­துள்­ளனர். இக் காலப் பிரிவில் பிரதி அமைச்­ச­ராக இருந்த

கே.ஏ. பாயிஸ் புத்­தளம் மாவட்­டத்­திற்கு செய்த அபி­வி­ருத்­திகள்
விதி­வி­லக்­காகும். பாயிஸ் பிரதி அமைச்­ச­ராக இருந்த காலப் பிரிவில் கல்வி, சுகா­தாரம் மற்றும் ஏனைய விட­யங்­களில் புத்­தளம் மாவட்ட முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி ஏனைய சமூ­கமும் நிறை­யவே அபிவிருத்­தி­களை கண்டு கொண்­டது. என­வேதான் எமக்­கென ஒரு எம்.பி. இருக்­கின்ற போது நமக்கு தேவை­யான அபி­வி­ருத்­தி­களை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

நவ­வியின் இரா­ஜி­னா­மாவை எண்ணி கவ­லை­யுறும் புத்­தளம் மாவட்ட முஸ்­லிம்கள் இறு­தி­யாக நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்தலின் போது நவவி 1931 வாக்­கு­களால் தோல்­வி­ய­டைந்­ததை எண்ணிப் பார்க்­க­வில்லை. 1931 வாக்­கு­களை நவ­விக்கு வழங்கி இருப்பின் நவவி தேசிய பட்­டி­யலை நாட வேண்டி இருக்­காது. புத்தளத்­திற்கு அதுவும் புத்­தளம் தொகு­திக்­கென்று ஒரு முஸ்லிம் எம்.பி. கிடைத்­தி­ருப்பார்.

விகி­தா­சார தேர்தல் முறை இருக்கும் வரை புத்­தளம் முஸ்லிம் மக்கள் ஒற்­று­மைப்­பட்டு செயற்­ப­டு­­வதன் மூலம் மட்­டுமே எமக்கென்று ஒரு முஸ்லிம் எம்.பி.யைப் பெற்றுக் கொள்ள முடியும். புத்­தளம் மாவட்ட முஸ்லிம் வாக்­கா­ளர்கள் முஸ்லிம் வேட்பாளர்களை ஒதுக்­கி­விட்டு பெரும்­பான்மை வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை அளிப்­பதன் மூலம் நாம் தமக்­கென ஒரு முஸ்லிம் எம்.பி. யை வாழ் நாளிலே பெற்றுக் கொள்ள முடி­யாது. மீண்டும் தொகுதி ரீதி­யி­லான தேர்தல் முறை வரும் போது நாம் நமெக்­கென ஒரு எம்.பி.யை பெற்றுக் கொள்ள சந்­தர்ப்பம் கிடைக்கும்.

அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­காக புத்­தளம் முஸ்­லிம்கள் இப்பொ­ழுதே திட்­ட­மிட வேண்டும். பெரு­பான்மை கட்­சி­களை நம்பி, நம்பி நாம் கற்ற பாடங்கள் போதுமா அல்­லது பெரும்­பான்மை கட்சிகள் மூலம்தான் ஒரு முஸ்லிம் எம்.பி.யை பெறு­வதா அல்­லது சிறு­பான்மை கட்­சியில் தனித்து போட்­டி­யிட்டு புத்­த­ளத்­திற்கு ஒரு முஸ்லிம் எம்.பி.யைப் பெற்றுக் கொள்­வதா என்று இப்­பொ­ழுதே சிந்தித்து, திட்­ட­மிட வேண்டும். 

அதே­வேளை புத்­தளம் மாவட்டத்திலுள்ள ஒரு குழு­வினர் மாற்று கட்சி­களை நாடு­வதா என்றும் சித்­திக்க ஆரம்­பித்­துள்­ளனர். இவற்றை எல்லாம் சிந்­தித்து திட்­ட­மிட வேண்­டிய காலம் இன்­றாகும். பாரா­ளு­மன்ற தேர்தலுக்காக வேட்­பு­மனு கோரப்­பட்ட பின்னர் சிந்தித்து செயற்படுவதாலேயே புத்தளம் மக்கள் முஸ்லிம் எம்.பி.யை இதுவரை இழந்து வந்துள்ளனர்.

தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்த நவவியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்று புத்தளம் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தலைவர்களில் ஒருவராக இருக்கும் நவவி தொடர்ந்து அந்தக் கட்சியில் இருப்பாரா, அல்லது நவவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமா என்ற வினாக்களுக்கு விடை தேட முடியாத நிலையில் புத்தளம் மக்கள் காணப்படுகின்றனர். எம்.பி. பதவிக்கு சமமான ஒரு பதவி தற்போதுள்ள கட்சி மூலம் நவவிக்கு கிடைக்கும் என்ற ஒரு உறுதியான நம்பிக்கையில் புத்தளம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். 

Vidivelli

No comments:

Post a Comment