ஸஹர் நேரத்தில் மக்­களை எழுப்பும் பலஸ்­தீ­னர்கள் இஸ்­ ரே­லினால் தடுத்­து­வைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

ஸஹர் நேரத்தில் மக்­களை எழுப்பும் பலஸ்­தீ­னர்கள் இஸ்­ ரே­லினால் தடுத்­து­வைப்பு

புனித ரமழான் மாதத்தில் அதி­காலை உணவை உண்­ப­தற்­காக ஸஹர் நேரத்தில் மக்­களை எழுப்­பு­வ­தற்கு வீதி­க­ளு­டாக அழைப்பு விடுத்­துக்­கொண்டு செல்லும் 'முச­ஹா­ரதி' என்று அழைக்­கப்­படும் பணி­யா­ளர்கள் பழைய நகரில் வைத்து கைது செய்­யப்­பட்­ட­தாக ஹாரெடஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 

இப் பிர­தே­சத்தில் சுமார் ஆயிரம் பேர் வசிக்­கின்­றனர். அவர்கள் பல தலை­மு­றை­க­ளா­க­ இ­டம்­பெற்று வரு­கின்ற இப் பாரம்­ப­ரிய நடைமுறை தொடர வேண்­டு­மென்றே எதிர்­பார்க்­கின்­றனர். ஆனால் அவர்­களுள் 10 பேர் மாத்­தி­ரமே இதற்கு எதி­ராக முறைப்­பாடு செய்துள்­ளனர் என கைது செய்­யப்­பட்­ட­வர்­களுள் ஒரு­வ­ரான மொஹமட் ஹாஜிஜி தெரி­வித்தார்.

எமது மொத்த செயற்­பா­டு­களும் 20 நிமி­டங்­களில் முடிந்­து­விடும், வீடு­க­ளுக்கு வெளியே சில வினா­டி­களே நாம் நிற்போம். எனக்கு முதல் தடவை 450 ஷெகெல்ஸ் (126 டொலர்) தண்­டப்­பணம் விதிக்கப்படும் எனவும், இரண்­டா­வது தடவை 1000 ஷெகெல்ஸ் (281டொலர்) தண்­டப்­பணம் விதிக்­கப்­படும் எனவும் அதன் பின்னர் மேல­தி­க­மாக 1000 ஷெகெல்ஸ் தண்­டப்­பணம் விதிக்­கப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது எனவும் அவர் தெரி­வித்தார்.

பொலி­ஸா­ரினால் தான் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் தள்ளிவிடப்­பட்­ட­தா­கவும் ஹாஜிஜி தெரி­வித்தார்.

இந்தச் செயற்­பாடு இரைச்­ச­லாக இருப்­ப­தா­கவும் தவ­றான உச்சாடனங்­களைக் கொண்­ட­மைந்­த­தாக இருப்­ப­தா­கவும் கிடைக்கப்­பெற்ற முறைப்­பாட்­டிற்கு அமைவாகவே தாம் நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப் பாரம்பரிய நடைமுறை இவ்வாறான சிக்கலொன்றை எதிர்நோக்கியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

Vidivelli

No comments:

Post a Comment