புனித ரமழான் மாதத்தில் அதிகாலை உணவை உண்பதற்காக ஸஹர் நேரத்தில் மக்களை எழுப்புவதற்கு வீதிகளுடாக அழைப்பு விடுத்துக்கொண்டு செல்லும் 'முசஹாரதி' என்று அழைக்கப்படும் பணியாளர்கள் பழைய நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹாரெடஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இப் பிரதேசத்தில் சுமார் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் பல தலைமுறைகளாக இடம்பெற்று வருகின்ற இப் பாரம்பரிய நடைமுறை தொடர வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களுள் 10 பேர் மாத்திரமே இதற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர் என கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான மொஹமட் ஹாஜிஜி தெரிவித்தார்.
எமது மொத்த செயற்பாடுகளும் 20 நிமிடங்களில் முடிந்துவிடும், வீடுகளுக்கு வெளியே சில வினாடிகளே நாம் நிற்போம். எனக்கு முதல் தடவை 450 ஷெகெல்ஸ் (126 டொலர்) தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது தடவை 1000 ஷெகெல்ஸ் (281டொலர்) தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் அதன் பின்னர் மேலதிகமாக 1000 ஷெகெல்ஸ் தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸாரினால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் தள்ளிவிடப்பட்டதாகவும் ஹாஜிஜி தெரிவித்தார்.
இந்தச் செயற்பாடு இரைச்சலாக இருப்பதாகவும் தவறான உச்சாடனங்களைக் கொண்டமைந்ததாக இருப்பதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாகவே தாம் நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப் பாரம்பரிய நடைமுறை இவ்வாறான சிக்கலொன்றை எதிர்நோக்கியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
Vidivelli
No comments:
Post a Comment