இஸ்லாமிய அகீதா கொள்கை முறன்பாட்டாளர்களுக்கு சக்காத் நிதி கொடுக்கலாமா? - காத்தான்குடி பைத்துஸ் சக்காத் நிதியம் தெரிவிப்பு - News View

About Us

Add+Banner

Sunday, May 13, 2018

demo-image

இஸ்லாமிய அகீதா கொள்கை முறன்பாட்டாளர்களுக்கு சக்காத் நிதி கொடுக்கலாமா? - காத்தான்குடி பைத்துஸ் சக்காத் நிதியம் தெரிவிப்பு

32498351_2132100540341825_7300056407208886272_n
இஸ்லாமிய அகீதா கொள்கை முறன்பாட்டாளர்களுக்கு சக்காத் நிதி கொடுக்கலாமா? என்பது தொடர்பில் மார்க்க ரீதியான பத்வாவை கேட்டு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளோம் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பைத்துஸ் சக்காத் அமைப்பு தெரிவித்துள்ளது.

12.5.2018 சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

காத்தான்குடி பீச் வே ஹேட்டலில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்மேளன பைத்துஸ் சக்காத் நிதியத்தின் முக்கியஸ்தர்கள் சமூகத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வறுமையை இல்லாமல் செய்வதே இந்த பைத்துஸ் சக்காத் திட்டத்தின் நோக்கமாகும்.

சமூகத்தில் காணப்படும் வறுமை நிலையினை ஒழித்து ஒரு சுபீட்சமான பொருளாதார நிலையை உருவாக்க வேண்டுமென்று எமது பைத்துஸ் சக்காத் எதிர் பார்க்கின்றது.

இந்த நாட்டில் பொருளாதார ரீதியாக எதிர் நோக்குகின்ற பிரச்சிளைகளுக்கு இந்த சக்காத் திட்டம் செல்வாக்கு செலுத்துகின்றது.

பொருளாததார ரீதியாக இலங்கை தாயகத்தை கட்டியெழுப்புதல் சமய சமூக பொருளாதார கல்வி மனித வள அபிவிருத்திகளை ஏற்படுத்துவதுதான் பைத்துஸ் சக்காத் திட்டத்தின் இலக்காகும்.

இந்த பைத்துஸ்ஸக்காத் திட்டம் 2002ம் ஆண்டு காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நேரம் 53 இலட்கம் ரூபா ஆரம்பக்கட்டமாக சேகரிக்கப்பட்டு இஸ்லாம் சக்காத் பெற தகுதியானவர்கள் என கூறும் எட்டுக் கூட்டத்தினருக்கும் அது பகிர்ந்தளிக்கப்பட்டது.
32374304_2132100660341813_5896301622740385792_n
பின்னர் இந்த கூட்டு சக்காத் நிதியம் இங்குள்ள தனவந்தர்கள் பள்ளிவாயல்களின் நிருவாகிகளின் பங்களிப்பு மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக இயங்கி இன்று வளர்ச்சி கண்டுள்ளது.

2002ம் ஆண்டியிலிருந்து 2017ம் ஆண்டு வரைக்கும் காத்தான்குடியில் 5689 பேர் பயண் பெற்றுள்ளனர். 2017ம் ஆண்டு 4 கோடியே 34 இலட்சகம் ரூபா இந்த திட்டத்தின் மூலம் சேகரித்தோம்.

இந்த கூட்டு சக்காத் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியினைக் கொண்டு பல ஆக்க பூர்வமான சில வேலைத்திட்டங்களை செய்யக் கூடியதாக இருந்தது

2017ம் ஆண்டில் 551 பயணாளிகள் இந்த உதவிகளை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 37 வீதம் இந்த சக்காத் நிதியினை சேகரிக்க பல திட்டங்களை முன்னெடுத்து கடந்த ஆண்டுகளை விட இந்த 2017ம் ஆண்டு 1 கோடியே 12 இலட்சம் ரூபா மேலதிகமாக நாங்கள் கேரித்தோம்.

2018ம் ஆண்டு சுமார் ஆறு கோடி ரூபாவினை சேகரிப்பதாக நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அது தொடர்பான கலந்துரையாடலை பள்ளிவாயல் நிருவாகிகளை அழைத்து பேசியுள்ளோம்.

இந்த ஆண்டு சக்காத் திட்டத்தின் மூலம் சுய தொழில் வாய்ப்புக்காக அதிகளவு நிதியினை வழங்கியுள்ளோம். சுய தொழிலை ஏற்படுத்துவதன் மூலம்தான் சொந்தக் காலில் நின்று தொழில் செய்து அந்தக் குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதனடிப்படையில் சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த அவர்களுக்குதவிகள் வழங்கப்பட்டன.

அதே போன்று மல சல கூடம் இல்லாதவர்களுக்கு மல சல கூடங்களை நிர்மானித்து வழங்கியுள்ளோம். கடனாளிகளையும் அடையாளம் கண்டு 66 பேருக்கு அவர்களது கடன்களை அடைப்பதற்காக 19 இலட்சம் ரூபா வழங்கியிருக்கின்றோம்.

163 பயணாளிகளுக்கு அவர்களின் குறை வீடுகளை பூர்த்தி செய்து கொடுத்துள்ளோம். இதற்காக இவ்வருடம் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா செலவு செய்துள்ளோம்.
32623056_2132100653675147_4167432756155908096_n
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு வரும் அதிக விண்ணப்பங்களில் புதிய வீடுகளை நிர்மானித்து தருமாறும் அதே போன்று வீடுகளை திருத்தி தருமாறுமே வருகின்றது.

எமக்கு கிடைத்த வீடு தொடர்பான விண்ணப்பங்களில் 30 வீதமான விண்ணப்பங்களுக்கான விடயங்களையே நாங்கள் செய்துள்ளோம்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பைத்துஸ் சக்காத் திட்டத்திற்கு ஒரு ஆளுநர் சபை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆளுநர் சபை மூலமே இந்த திட்டத்தினை முன்னெடுத்து செல்கின்றோம்.

கடந்த ஆண்டுகளில் இந்த சக்காத் அறவீடுகளில் இருந்த நிலைப்பாடுகளை விட இந்த முறை சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது கடந்த ஆண்டுகளை விட 30 வீத அதிகரிப்பு அறவீகளில் ஏற்பட்டுள்ளது. இது பைத்துஸ் சக்காத் செய்த மிகப் பெரிய சாதனையாகும் என தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் காததான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.சபீல் நழீமி, பைத்துஸ் சக்காத் திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஐ.எம்.கபூர் மதனீ செயலாளர் சட்டத்தரணி ஏ.உவைஸ் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ உட்பட சக்காத் திட்டத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *