காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் நடைபெற்ற நீச்சல் பயிற்சியை முடிந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 29.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை பீச் வே ஹோட்டலின் ஸ்தாபகரும் சுங்க அதிகாரியுமான எம்.ஏ.எம்.முபீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் விளையாட்டுதறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இல்மி அகமட் லெவ்வை உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள, அதிபர்கள், வைத்தியர்கள் பாடசாலைகளின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஹோட்டலில் நடாத்தப்பட்ட ஆறு மாத கால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இதன் போது வழங்கப்பட்டதுடன் நீச்சல் பயிற்சியை நடாத்திய பயிற்சியாளரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
காத்தான்குடியில் ஆண்களுக்கான நீச்சல் தடாகம் உடற்பயிற்சி கூடம் என்பன அமையப்பெற்றுள்ள ஒரே ஒரு இடமாக இந்த பீச் வே ஹோட்டல் அமைந்துள்ளது.
இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 10.2.2018 அன்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment