முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் அதிகாரிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினர்.
2018 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களை வடக்கில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது.
வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 1000 மில்லியன் ரூபாவை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதில் நிதியமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கி அதிகாரிகள், வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயலர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment