இன்று பிற்பகல் ஆற்றில் மூழ்கி தாய், 14 வயது மகள் உற்பட நால்வர் பலி. - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

இன்று பிற்பகல் ஆற்றில் மூழ்கி தாய், 14 வயது மகள் உற்பட நால்வர் பலி.

காலி, ஹிநிதும பிரதேசத்தில் கிங் கங்கையில் மூழ்கிய நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 வயது மகள், 39 வயதுடைய தாய் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

கங்கையில் நீராடச் சென்ற குறித்த பெண்கள் நீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்த ஏனைய இரண்டு சிறுமிகளும் 14 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஹினிதும மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment