அத்துரலிய ரத்ன தேரர் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

அத்துரலிய ரத்ன தேரர் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக்கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரே எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கடிதத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் ‘நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம், உரியதன்று. எல்லா இலங்கையர்களினதும் கரிசனைகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.

மோசமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும், ரணில் விக்கிமசிங்கவுக்கு, ஆதரவளித்தால் அது உங்களின் கட்சியின் புகழுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment