அம்பாறையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை நியாயப்படுத்தியும், முஸ்லிம்களை வெளியேறுமாறு கூறியும் மொனராகலை மாவட்டத்தின், சியம்பலாண்டுவையில் கறுப்பு கொடி கட்டி பெரும்பான்மை குழுக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை சியம்பலாண்டுவையில் உள்ள வெளியூரை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களது வியாபாரஸ்தலங்களை மூடிவிட்டு தங்களது ஊர்களுக்கு திரும்பியுள்ளதாகவும் ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் கடைகளை மூடிவிட்டு உள்ளே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக அங்கு என்ன நடக்குமென்ற அச்சம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment