இலங்கையில் அமைதிப் பணி திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவோடு இருதரப்பு ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டின் சமாதான படையின் பதில் பணிப்பாளர் ஷீலா க்ரோவிளியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்..
No comments:
Post a Comment