சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இளைஞர்களினால்மே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள், அதிகபடியாக படுகொலை கொலை செய்யப்பட்டனர்.
இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகளை கொல்வதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
2009 இல் இதே போன்ற அழிவை ஈழத்தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment