சிலாபம், இரணவில காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 25 ஆம் திகதி காணாமல்போன 9 வயதுடைய பாடசாலை மாணவன் சிலாபம், இரணவில சமிந்துகம காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்கு உட்ப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து அறியமுடிகிறது. சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட மரண விசாரணை அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஏற்கனவே இவ்வாறு குழந்தை ஒன்றை கொலை செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment