கோத்­தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, November 29, 2017

demo-image

கோத்­தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

gotabhaya-400-seithy3
முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை பொதுச்சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று 29.11.2017 இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த இடைக்காலத் தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதிபதி எல்.ரீ.பீ. தெஹிதெனிய மற்றும் ஸிரான் குணரத்ன ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

டீ.ஏ. ராஜ­பக்ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கருதப்­படும் நிலையில், அவர் நேற்று முன்­தினம் தாக்கல் செய்­த ரீட் மனுவை இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டபோதே இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *