இலங்கை சுங்கத் திணைக்களத்தால் சோதனையிடாமல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களிலும் என்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியலை பிவிதுரு ஹெல உறுமய கட்சியின், தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.
இந்த கொள்கலன்கள் தொடர்பாகவே இன்றையதினம் (09) உதய கம்மன்பில சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து சிஐடியிலிருந்து அவர் வெளியேறியிருந்தார்.
சுங்கத்தில் சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்று (09) காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வௌியேறினார்.
தம்மிடமிருந்த விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான பட்டியலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கியதாக உதய கம்மன்பில இதன்போது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விசாரணைக்கு முகம் கொடுத்த நிலையிலேயே குறித்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான பட்டியலை அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment