இம்மாதத்துக்குள் சமர்ப்பிக்காதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 5, 2025

இம்மாதத்துக்குள் சமர்ப்பிக்காதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கு பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கு பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலதிக தகவல்களை 1944 அல்லது www.ird.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி பிராந்திய அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment