போதைப் பொருளுடன் தொடர்புடையோரது ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதியோம் : தொடர்புகளும் துண்டிக்கப்படும் என பலாங்கொடை பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 25, 2025

போதைப் பொருளுடன் தொடர்புடையோரது ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதியோம் : தொடர்புகளும் துண்டிக்கப்படும் என பலாங்கொடை பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவிப்பு

போதைப்­ பொருள் வியா­பா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களை பள்ளிவாசல் மூலம் நல்­ல­டக்கம் செய்ய அனு­ம­திக்­க­மாட்டோம் என பலாங்­கொடை பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்துள்­ளது.

அத்­துடன் போதைப்­ பொருள் வியா­பா­ரத்­துடன் தொடர்புடையவர்களுடன் பலாங்­கொடை பெரிய பள்­ளி­வாசல் எந்தவித தொடர்­பு­க­ளையும் பேண­மாட்­டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்­ளது.

பலாங்­கொடை பிர­தே­சத்தில் போதைப் ­பொருள் வியா­பா­ரத்தில் ஈடுப­டு­கின்ற நான்கு முஸ்லிம் வீடு­க­ளுக்கு அப்­பி­ர­தேச உல­மாக்கள் மற்றும் இளை­ஞர்கள் நேர­டி­யாகச் சென்று இந்த அறி­வித்­தலை வழங்­கி­யுள்­ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பலாங்­கொடை இளைஞர்­களை பாது­காக்க வேண்­டி­யுள்­ளது. இதனால் பலாங்கொடைக்கு போதைப் ­பொ­ருட்­களை கொண்­டு­வர வேண்டாம் என்ற கோரிக்­கையும் பலாங்­கொடை முஸ்­லிம்­க­ளினால் போதைப் பொருள் வியா­பா­ரி­களின் குடும்­பத்­தி­ன­ரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பலாங்­கொடை முஸ்­லிகள் மக்கள் குறித்த வீடு­க­ளுக்கு சென்றபோது, போதைப்­ பொருள் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் தலைமறைவாகியமை குறிப்­பி­டத்­தக்­கது.

நாட்டுச் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட வேண்­டி­யுள்­ளது. இத­னா­லேயே வீடுக­ளுக்கு வந்து நேர­டி­யாக விழிப்­பு­ணர்­வு­களை மேற்கொள்கின்றோம் எனவும் இதன்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 19ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பலாங்­கொடை பெரிய பள்ளிவா­சலில் போதைப் ­பொருள் தொடர்பில் ஜும்ஆப் பிரசங்கம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்தே இப்பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தினை ஒழிக்க வேண்டும் என ஊர் மக்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment