‘எமக்கு நீதி வேண்டும்’ : முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம் : திருமலை மாவட்ட செயலகம் முன்பாகவும் 8 ஆம் நாளாக சத்தியாக்கிரகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 25, 2025

‘எமக்கு நீதி வேண்டும்’ : முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம் : திருமலை மாவட்ட செயலகம் முன்பாகவும் 8 ஆம் நாளாக சத்தியாக்கிரகம்

திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்பட்ட முத்து நகர் கிராம சேவகர் பிரி­வி­லுள்ள விவ­சாய காணியை அர­சாங்கம் இந்­திய தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு குத்­த­கைக்கு வழங்­கி­யுள்­ளது. இதன் ­கா­ர­ண­மாக குறித்த பிர­தே­சத்தில் வாழ்ந்த விவ­சாயக் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தமக்கு உரிய நீதி வழங்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்தி கொழும்­பி­லுள்ள பிரதமர் அலு­வ­ல­கத்­திற்கு முன்­பாக நேற்று (24) ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்­டனர்.

இத­னி­டையே, மேற்­படி கோரி­க்கையை முன்­வைத்து திருகோணமலை மாவட்ட செய­லகம் முன்­பா­கவும் நேற்­றையதினம் எட்­டா­வது நாளா­கவும் சத்­தி­யாக்­கி­ரக போராட்­ட­மொன்றும் பதிக்கப்பட்ட மக்­களால் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்­றது.

கொழும்பு ஆர்ப்­பாட்டம்
இந்­திய தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு அர­சாங்­கத்தால் வழங்கப்பட்டுள்ள முத்து நகர் 800 ஏக்கர் விவ­சாய காணியை மீள விவ­சா­யி­க­ளுக்கு பெற்றுத்தரு­மாறு வலி­யு­றுத்தி நேற்று பிர­தமர் காரி­யா­ல­யத்­துக்கு முன்­பாக முத்து நகர் விவ­சா­யிகள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

முத்து நகர் பகு­தியில் உள்ள 800 ஏக்கர் விளை நிலத்­தையும், தமது வாழ்­வா­தா­ரத்­தையும் இழந்து விவ­சா­யிகள் வாழ வழி­யின்றி கடும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளனர். அர­சாங்­கத்­திற்கு எமது பிரச்சினைகள் தொடர்பில் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ள போதும், அரசாங்கம் தொடர்ந்தும் விவ­சா­யி­களின் விட­யத்தில் அலட்­சி­ய­மாக செயற்­ப­டு­வ­தாக போராட்­டக்­கார்கள் இதன்­போது சுட்டிக்காட்டியிருந்­தனர்.

திரு­கோ­ண­மலை முத்து நகர் பகு­தியில் பொது­மக்­களின் எதிர்ப்பையும் மீறி விவ­சாய நிலங்கள் அர­சாங்­கத்தால் இந்­திய நிறுவ­னத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் விளை நிலங்­களை தமக்கு பெற்­றுத்­த­ரு­மாறு வலி­யு­றுத்தி நேற்று (24) முத்து நகர் விவ­சா­யிகள் கொழும்பில் அமைந்­துள்ள பிர­தமர் அலு­வ­லகம் முன்­பாக போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். காலை 10.30 மணி­ய­ளவில் ஒன்றுகூடிய ஆர்­பாட்­டக்­கா­ரர்கள் தமது வாழ்­வா­தா­ர­மாக உள்ள விளை நிலங்­களை இழந்து பெரும் நெலுக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­தனர்.

முத்து நக­ரி­லி­ருந்து 2 பேருந்­து­களில் வரு­கை­ தந்­தி­ருந்த விவ­சா­யிகள், பொது­மக்கள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் என பலரும் மேற்­படி போராட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்த காணி­களை அர­சாங்கம் பறித்து வெளி­நாட்டு நிறு­வ­னத்­திடம் கைய­ளித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு உரிய தீர்வு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. விவ­சா­யி­க­ளுக்கு உரிய காணியை அர­சாங்கம் சூரிய மின்­சக்தி திட்­டத்­துக்­காக ஒதுக்கியுள்ளது. மாற்றுக் காணி­களை வழங்­காது விவ­சா­யத்­துக்­காக இருந்த குளங்­க­ளையும் மூடு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்­மக்கள் விசனம் வெளி­யிட்­டி­ருந்­தனர்.

முத்து நகர் விவ­சாய காணி எமக்­கா­னது அவற்றை திருப்பிக் கொடு, அர­சாங்­கத்தின் செயற்­பாட்டால் வெளி­நாட்டு கம்­பெ­னிகள் இலாபமடைந்­துள்­ளன எனினும் விவ­சா­யிகள் தெருவில் விடப்பட்டுள்ளனர், ஏழை விவ­சா­யி­களின் வயிற்றில் அடிக்­காதே, எமது உரிமை எமக்கே வேண்டும், குளங்­களை மூடும் நடவடிக்கையை கைவிடு, தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் விவசாயி­களை இவ்­வாறா நடத்­துவீர் போன்ற வாச­கங்கள் பொறிக்கப்­பட்டபதா­கை­களை ஏந்­தியும் கோச­மிட்டும் ஆர்ப்பாட்டக்கார்கள் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

மேற்­படி போராட்டம் தொடர்பில் முத்து நகர் விவ­சா­யிகள் சங்கத் தலைவர் தாரிக் அசிஸ் தெரி­விக்­கையில், முத்து நகரில் சுமார் 53 வருட கால­மாக விவ­சாயம் செய்­து­வந்த காணி­களை தற்­போ­தைய அர­சாங்கம் சூரிய மின்­சக்தி திட்­டத்­துக்­காக இந்­திய தனியார் நிறுவனத்­துக்கு வழங்­கி­யுள்­ளது. உரிமை கோரிய விவ­சா­யி­க­ளையும் விரட்டி அடித்து விட்­டனர். எமக்கு உரிய தீர்வை வழங்­கு­மாறு தெரிவித்து ஏற்­க­னவே ஒகஸ்ட் 14 ஆம் திகதி ஜனா­தி­பதி செயலகத்துக்கு முன்­பாக ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம்.

அன்று ஜனா­தி­பதி செய­லாளர் எமக்கு அழைப்பு விடுத்து எதிர்­வரும் 30 ஆம் திக­திக்கு முன்னர் விவ­சா­யிகள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்சனை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். எனினும் அவர் குறிப்­பிட்­டதை போல எமக்கு எவ்­வித தீர்வும் வழங்கப்படவில்லை. 

இந்­நி­லையில் இந்­திய நிறு­வனம் விளை­நி­லங்­களைச் சூழ வேலியமைத்து அவற்றை ஆக்­கி­ர­மித்­துள்­ளது. குறித்த நிறுவனங்களுடன் கலந்­து­ரை­யாடி அர­சாங்கம் எமக்­கான தீர்வை வழங்க வேண்டும்.

அது­வரை பிர­தமர் அலு­வ­ல­கத்தை விட்டு அகலும் எண்ணம் எமக்கில்லை. சுமார் 800 ஏக்கர் நிலத்தை இலங்கை துறை­முக அதிகார சபைக்கு சொந்­த­மான காணி எனக் கூறி கையகப்படுத்தியுள்­ளனர். 1984 ஆம் ஆண்டு குறித்த காணி தொடர்பில் அரச வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எனினும் பல வரு­டங்­க­ளாக விவ­சாயம் செய்­து­வரும் மக்­க­ளுக்கு இவ்­விடம் தெரியாது. 2023 ஆம் ஆண்­டுக்கு பிறகே காணி பிரச்­சனை பூதாகரமாக உரு­வெ­டுத்­தது. உரிய ஆவ­ணங்கள் இல்லை ஆகையால் நிலத்தை உரிமை கோர முடி­யா­தென அதி­கா­ரிகள் தெரிவிக்­கின்­றனர் என்றார்.

திரு­கோ­ண­ம­லையில் சத்­தி­யா­கி­ரகம்
இத­னி­டையே, திரு­கோ­ண­மலை மாவட்ட செய­லகம் முன்­பாக முத்து நகர் விவ­சா­யிகள் தொடர் சத்­தி­யாக்­கி­ரக போராட்­ட­மாக தொடர்ந்தும் 08 வது நாளா­கவும் நேற்­றும் சத்­தி­யாக்­கி­ரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டித்து கம்­ப­னி­க­ளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை­நி­லங்­களை உட­ன­டி­யாகத் திருப்பிக் கொடு!’, ‘இந்­தியக் கம்­ப­னி­களின் நில மற்றும் வளச் சூறை­யா­ட­லுக்கு எதி­ரான போராட்­டத்தைத் தொடங்­குவோம்!’, ‘பொய்கள் வேண்டாம்’, ‘விவ­சா­யி­களை இப்­ப­டியா நடாத்­து­வது’ போன்ற வாச­கங்­களை ஏந்தி­ய­வாறும் முத்து நகர் விவ­சா­யிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவ­சாய சம்­மே­ளன பிர­தி­நி­திகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Vidivelli

No comments:

Post a Comment