(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இது உண்மையா? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வாக்குமூலமளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாகினார். ஆனால் அவர் கைது செய்யப்படுவதாக யூடியூபர் சுதா என்பவர் முன்னதாகவே குறிப்பிடுகிறார். யூடியூபர் சுதா நீதிபதியா ? யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இவ்வாறானவர்களின் முறையற்ற கருத்துகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது. இது வெட்கத்துக்குரியதொரு செயற்பாடு என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சாடினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வரலாற்றை மறந்து விட்டு செயற்படக்கூடாது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் மனித உரிமைகள் மீறல் பற்றியே பேசப்படுகிறது. இந்த மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. அவை பற்றி எவரும் பேசுவதில்லை.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இது உண்மையா? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குமூலமளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாகினார். ஆனால் அவர் கைது செய்யப்படுவதாக யூடியூபர் சுதா என்பவர் குறிப்பிடுகிறார்.
யூடியூபர் சுதா நீதிபதியா ? யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு. இவ்வாறானவர்களின் முறையற்ற கருத்துகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது. இது வெட்கத்துக்குரியதொரு செயற்பாடு.
நாட்டின் மூன்றாம் பிரஜையான பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் பொது நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளார். அவ்விடத்தில் வைத்து இந்த சுதா என்பவர் பிரதமர் தோளில் அடித்து பேசியுள்ளார். இது வெட்கத்துக்குரிய செயற்பாடு.
நாட்டின் மூன்றாம் பிரஜையிடம் இவ்வாறு நடந்துகொள்வது. நாயுடன் உறங்கினால் உன்னிகளுடன் எழும்ப வேண்டும் என்ற பழமொழி உள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சியில் பெருந்தோட்ட மக்களுக்கு பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
மலையக மக்கள் ஒருபோதும் எமக்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். ஆகவே மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றார்.
No comments:
Post a Comment