சுஹைல் அநியாயமாக கைது செய்யப்பட்டமைக்கெதிராக மனு தாக்கல் செய்ய நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யவும் அவதானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

சுஹைல் அநியாயமாக கைது செய்யப்பட்டமைக்கெதிராக மனு தாக்கல் செய்ய நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யவும் அவதானம்

மாவ­னெல்லை இளைஞர் முஹம்மத் சுஹைல் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் அநி­யா­ய­மாக பொலி­ஸா­ரினால் கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்பா­டொன்றை பதிவு செய்­வதற்­கான நட­வ­டிக்­கை முன்னெடுக்­கப்­ப­ட்டு வருகிறது.

அத்­துடன், பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள குறித்த இளைஞர் தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை கல்­கிசை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­று­ வ­ரு­கின்­ற­ நிலையில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதமளவில் உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்­வது குறித்தும் அவ­தானம் செலுத்தப்பட்­டுள்­ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 23ஆம் திகதி பிற்­பகல் 2.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் தெஹி­வளை, பெயார் லைன் வீதி அருகே நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் கட்­டிடம் ஒன்றின் அருகே (இஸ்ரேலிய Chabad House இன் அருகே வைத்து) மொஹம்மட் சுஹைல் எனும் இந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்­பட்டார். 

கைது செய்­யப்­படும்போது அவ­ரிடம் தேசிய அடை­யாள அட்டை இருக்­க­வில்லை என கூறப்­ப‌­டு­கின்­றது. ஆனால் அப்­போது உடனடியாக கைத்­தொ­லை­பே­சியில் உள்ள தேசிய அடை­யாள அட்டையின் பிரதி பொலி­ஸா­ருக்கு காண்­பிக்­கப்­பட்­ட­தாக கூறப்படுகின்­றது.

மறுநாள் அதா­வது 2024 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 24 ஆம் திகதி முற்­பகல் சுஹைல், கல்­கிஸ்ஸை மேல­திக நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அதன்­போது அவரை விடு­வித்து நீதிமன்ற‌ம் உத்­த­ர­விட்­டது.

குறித்த இளை­ஞனை விடு­வித்த பின்னர், குறித்த இளை­ஞனும் அவரது தந்­தையும் கொழும்­பி­லி­ருந்து மாவ­னெல்­லையில் உள்ள அவர்­களின் வீட்­டுக்கு செல்ல முன்­ன­ரேயே தெஹி­வளைப் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மாவ­னெல்லை பொலி­ஸா­ருடன் அந்த வீட்டுக்கு சென்­றி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­ற‌து.

இத­னை­ய­டுத்து சுஹை­லிடம் வாக்குமூலம் ஒன்­றினை பெற்றுக் கொள்­வ­தற்­காக அவரை கொழும்­புக்கு அழைத்து செல்­வ­தாக கூறி அழைத்து வந்­துள்­ளனர்.

ஆனால் கொழும்­புக்கு அழைத்து செல்­லப்­பட்ட சுஹைல் “இஸ்­ரே­லிய கொடிக்கு கையால் குத்­து­வது” போன்ற ஒரு ஸ்டிக்­கரை கைய­டக்கத் தொலை­பே­சியில் வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்து பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்­துள்­ளனர்.

இவ்­வாறு சுஹைல் கைது­ செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் அவரின் குடும்­பத்­தினர் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம்கொ­டுத்து வரு­கின்­றனர்.

தினச் சம்­ப­ளத்­திற்கு தொழில் புரியும் அவ­ரது தந்தை பல நெருக்கடிக­ளுக்கு மத்­தியில் தனது மகனை விடு­விப்­ப­தற்­காக தனியா­கவே முயற்­சி­களை மேற்­கொண்­டு­வந்தார். 

தனது வீட்டை அட­மானம் வைத்­துள்­ள­துடன், பல தரப்­பி­ன­ரி­டமும் கடன்­களை பெற்று பல சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்ளார். அத்துடன், சுஹைலும் அவ­ரு­டைய குடும்­பத்­தி­னரும் பல வகை­யிலும் மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யுள்­ளனர்.

தன்­னார்வ தொண்­டர்­களின் உதவி கிட்­டும்­வரை பெரும் சவால்ளுக்கு முகம்கொ­டுத்­துள்ள சுஹைலின் குடும்­பத்­தினர் சார்பில் இது குறித்து மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வருகி­றது. 

அத்­துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் உயர் நீதிமன்றத்திலும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

Vidivelli

No comments:

Post a Comment