ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை - அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை - அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு

புக­லிடம் கோரி ஆபத்­தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்துள்ள 103 ரோஹிங்­கிய அக­திகள் தொடர்பில் தீர்­மா­ன­மொன்றை எடுக்க முடி­யாத நிலைக்கு அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொதுமக்கள் பாது­காப்பு மற்றும் பாரா­ளு­மன்ற விவ­கார அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால தெரி­வித்தார்.

இதன் கார­ண­மாக அவர்­களை தொடர்ந்தும் முல்­லைத்­தீ­வி­லுள்ள விமானப்படை முகாமில் தடுத்­து­ வைத்­துள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அங்கு தங்­க­ வைக்­கப்­பட்­டுள்ள ரோஹிங்­கி­யர்­க­ளுக்குத் தேவையான அனைத்து அடிப்­படை வச­தி­களும் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட்டு வரு­வ­தாக அமைச்சர் கூறினார்.

இது குறித்து அவர், மேலும் தெரி­விக்­கையில், ரோஹிங்கிய அக­திகள் நாடற்­ற­வர்கள் என்ற அடிப்­ப­டையில் இவர்­களை எங்கு அனுப்­பு­வது என்­பது தொடர்பில் இது­வரை ஒரு தீர்­மா­னமும் மேற்­கொள்ள முடியாதுள்­ளது. 

அதே­வேளை, இலங்­கைக்குள் சட்­ட ­ரீ­தி­யற்ற முறையில் நுழைந்தார்கள் என்ற குற்­றச்­சாட்டின் கார­ண­மாக இவர்­களை நாட்டுக்குள் அனு­ம­திக்க முடி­யா­துள்­ளது.

எவ்­வா­றா­யினும், ரோஹிங்­கிய அக­திகள் தொடர்­பி­லான கலந்துரையா­ட­லொன்று ஏற்­பாடு செய்­யு­மாறு வெளி­வி­வ­கார அமைச்­சிடம் கோரிக்கை விடுத்­துள்ளேன். 

அத்­துடன் இவர்கள் தொடர்பில் நீதி­மன்றம் வழங்கும் தீர்ப்பின் பிரகாரம் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால மேலும் தெரி­வித்தார்.

கடந்த டிசம்பர் 19ஆம் திகதி புக­லிடம் கோரி ஆபத்­தான கடல் பயணத்தின் ஊடாக வந்த இவர்­கள் திரு­கோ­ண­ம­லைக்கு அண்­மித்த கடற் பரப்பில் வைத்து கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இவர்கள் வந்த படகில் பணி­யாற்­றிய 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Vidivelli

No comments:

Post a Comment