திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குச்சவெளி ,புல்மோட்டை பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முறைப்பாடு செய்துள்ளார்.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மற்றும் சில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அசச்சுறுத்தல் விடுத்ததோடு தொடர்ச்சியாக சேறுபூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
எனவே அவர்களுக்கு எதிராக நேற்று (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது முறைபாட்டை பதிவு செய்துள்ளார்.
அத்துடன் தனது சட்டதரணி ஊடாக அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளார்.
No comments:
Post a Comment