பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று (23) நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிச் செல்லும் பாதையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளனது. முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக காயம் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் முன்னால் பயணித்த வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது இவ்விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தாக நானு ஓயாப் பொலிஸார் தெரிவித்தனர்.
பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் இல்லாதபோதும் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment