வீசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 12, 2025

வீசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது

மீரிகமவில் உள்ள கோழி பதப்­ப­டுத்தும் தொழிற்­சா­லையில் யூத மத சம்­பி­ர­தா­ய­மான கோஷர் முறையை மேற்­கொண்ட ஐந்து யூத மதகுரு­மார்கள், பயண விசா நிபந்­த­னை­களை மீறி­ய­தற்­காக கடந்த திங்­க­ளன்று குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தி­னரால் (DIE) கைது செய்­யப்­பட்­டனர்.

குடி­வ­ரவு திணைக்­கள அதி­கா­ரிகள், புல­னாய்வு தக­வலின் அடிப்படையில் தொழிற்­சா­லையில் சோதனை நடத்தி, மூன்று இஸ்ரே­லி­யர்கள் உட்­பட ஐந்து யூத மத­கு­ரு­மார்­களை கைது செய்தனர். மற்ற இருவர் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இத்­தா­லியைச் சேர்ந்­த­வர்கள்.

முதல் கட்ட விசா­ர­ணை­களில், இவர்கள் சமீ­பத்தில் பயண விசாவில் இலங்­கைக்கு வந்து, யூத மதச் சட்­டங்­க­ளுக்கு ஏற்ப கோழி இறைச்சியை கோஷர் முறையில் தயா­ரித்து வந்­தமை தெரி­ய­வந்­தது. இவ்­வாறு தயா­ரிக்­கப்­பட்ட இறைச்சி, உள்ளூர் சபாட் ஹவுஸ் யூத மத மையங்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்டு, யூதர்கள் வருகை தரும் அரு­கம்பே பகுதிக்கு அனுப்­பப்­ப­ட­வி­ருந்­தது.

குடி­வ­ரவு திணைக்­க­ளத்தின் விசா­ரணைப் பிரிவின் மூத்த அதி­காரி ஒருவர், தெரி­விக்கையில், “இரண்டு இஸ்­ரே­லி­யர்கள் மார்ச் மற்றும் மே மாதங்­களில் இலங்­கைக்கு வந்­தனர். மற்­ற­வர்கள் ஜூன் முதல் வாரத்தில் வந்­தனர். யூத மத உணவு சம்­பி­ர­தா­யங்­களை மேற்கொள்வது இலங்­கையில் சட்­ட­வி­ரோ­த­மல்ல. ஆனால், பயண விசாவில் வணிக நோக்கில் இது­போன்ற செயல்­களை மேற்­கொள்வது சட்­ட­வி­ரோ­த­மாகும். பயண விசாவில் எந்­த­வொரு வேலை தொடர்பான செயல்­பாடும் அனு­ம­திக்­கப்­ப­டாது.”

மேலும், இது­போன்ற செயல்­பாடு இலங்­கையில் முதல் முறை­யாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும், வெளி­நாட்டு மத­கு­ரு­மார்கள் இதற்கு முன் மத அனு­மதி பெறாமல் இலங்­கைக்கு வரு­வ­தற்கு முன் மதவிவகார அமைச்சின் முன் அனு­மதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குடி­வ­ரவு திணைக்­களம், சமீ­பத்தில் பயண விசாவில் மதப் பிரசாரங்களை மேற்­கொண்ட வெளி­நாட்டு மத­கு­ரு­மார்­களை கைது செய்து நாடு கடத்­தி­யுள்­ளது. இது நேரடி மதப் பிர­சா­ர­மாக இல்லாவிட்டாலும், இதற்கு குறைந்­த­பட்சம் வணிக விசா பெற்­றி­ருக்க வேண்டும் என்று அதி­காரி தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்ட ஐந்து வெளி­நாட்டு ஆண் மத­கு­ரு­மார்­களும், அவர்­களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனர்.

குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டாளர் ஜெனரல் சமிந்த பத்தி­ரா­ஜாவின் உத்­த­ரவின் பேரில் விசா­ர­ணைகள் முன்னெடுக்கப்படு­கின்­றன.

Vidivelli

No comments:

Post a Comment