இலங்கையில் இஸ்ரேலியர்களின் யூத மத மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 12, 2025

இலங்கையில் இஸ்ரேலியர்களின் யூத மத மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

இலங்­கையில் இஸ்­ரே­லி­யர்­களால் நிறு­வப்­பட்­டுள்ள யூத மத ‘சபாத்’ மையங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் நிலவி வரு­வதால் 24 மணி ­நேர பாதுகாப்பு வழங்க நட­வ­டிக்­கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் வசிக்கும் இஸ்­ரே­லிய பிர­ஜை­களின் மத, பொழு­து­போக்கு மற்றும் உணவு மற்றும் பான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிறுவப்பட்டுள்ள சபாத் மையங்­களின் பாது­காப்பு குறித்து, நேற்றையதினம் விடுத்த விசேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கை­யின்­படி, நாட்டின் பல மாவட்­டங்­களில் அமைந்­துள்ள சபாத் மையங்­க­ளுக்கு 24 மணி நேர பாது­காப்பு வழங்க ஏற்­க­னவே அவ­சர நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதனால் குறித்த சபாத் மையங்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அச்சுறுத்தல்கள் அடை­யாளம் காணப்­ப­டு­கின்­றன என அறிக்கையில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த பாது­காப்பு ஏற்­பா­டு­களின் கீழ், சபாத் மையங்­க­ளுக்கு வருகை தரும் இஸ்­ரே­லிய பிர­ஜைகள் பாது­காப்­பான சூழலில் தங்கள் மத மற்றும் கலாச்­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வாய்ப்பு வழங்கப்பட்டுள்­ளது.

மேலும் அந்த இடங்­களின் பாது­காப்பை மேலும் உறுதி செய்வதற்காக தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்பு மேற்­கொள்­ளப்­படும் என்று பொலிஸ் தரப்பு கூறு­கி­றது.

அத்­துடன், நாட்டில் வசிக்கும் எந்­த­வொரு வெளி­நாட்­டி­னரின் பாதுகாப்­பிற்கும் ஏதேனும் அச்­சு­றுத்தல் இருந்தால், அச்சுறுத்தல்களை மதிப்­பிட்டு தேவை­யான பாது­காப்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை பொலிஸ் தரப்பு தயா­ராக உள்ளது என்றும் அந்த அறிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம், வெளிநாட்டினர் இலங்கையில் பாதுகாப்பாக தங்குவதற்கு தேவையான சூழலை உருவாக்க தாம் உறுதிபூண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment