மனிதாபிமான உதவிக் கப்பல் காஸாவை நோக்கிப் பயணிப்பதற்கு இடமளியுங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 12, 2025

மனிதாபிமான உதவிக் கப்பல் காஸாவை நோக்கிப் பயணிப்பதற்கு இடமளியுங்கள்

பலஸ்­தீ­னத்தில் பதி­வா­கி­வரும் சம்­ப­வங்கள் இலங்­கையில் இடம்பெற்ற இனப் ­ப­டு­கொ­லையை ஒத்­தி­ருப்­ப­தா­கவும், இப்பேரழிவைத் தடுப்­ப­தற்கு பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரான தமது ஒடுக்கு­மு­றை­களை இஸ்ரேல் முடி­வுக்கு கொண்­டு­வ­ர­ வேண்டும் எனவும் கொழும்பில் ஒன்­று­கூடி வலி­யு­றுத்­தி­யுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது­மக்கள், இஸ்­ரே­லி­யப் படையினரால் நிறுத்­தப்­பட்­டி­ருக்கும் ‘மட்லீன் சுதந்­திரக் கப்பல்’ காஸாவை நோக்­கிய அதன் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாகப் பூர்த்திசெய்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட ­வேண்டும் எனக் கோரி­யுள்­ளனர்.

சூழ­லியல் செயற்­பாட்­டாளர் கிரெட்டா தன்பேர்க் உள்­ள­டங்­க­லாக பல்­வேறு நாடு­க­ளைச்­ சேர்ந்த மனித உரி­மைகள் செயற்பாட்டாளர்களுடன் மனி­தா­பி­மான உதவிப் பொருட்­களை ஏற்றி­ய­வாறு காஸாவை நோக்கிப் பய­ணித்­துக்­ கொண்­டி­ருந்த கப்பலுக்குள் அத்­து­மீறி நுழைந்த இஸ்­ரே­லி­யப்­ ப­டை­யி­னரால் அக்கப்பல் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அக்­கப்பல் விடு­விக்­கப்­பட்டு, காஸா­வுக்­கான அதன் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாகப் பூர்த்­தி ­செய்­வ­தற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், இஸ்­ரேலின் பிடிக்குள் இருந்து காஸாவை மீட்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி இலங்­கையில் இயங்­கி­ வரும் பலஸ்தீன விடு­தலை இயக்­கத்­தினால் கடந்த திங்­கட்­கி­ழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு கொள்­ளுப்­பிட்டி லிபர்ட்டி சுற்­று­வட்­டத்­துக்கு அரு­கா­மையில் கவ­ன­யீர்ப்­புப்­ போ­ராட்­ட­மொன்று ஏற்­பாடு செய்யப்பட்­டி­ருந்­தது.

இப்­போ­ராட்­டத்தில் மனித உரி­மைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்­டா­ளர்கள், மதத் ­த­லை­வர்கள், பலஸ்­தீன விடு­தலை ஆதரவா­ளர்கள் மற்றும் பொது­மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்­தனர்.

அவர்கள் ‘பலஸ்­தீன விடு­தலை’, ‘பலஸ்­தீனம் பலஸ்­தீ­னர்­க­ளுக்கே உரி­யது’, ‘நாம் பலஸ்­தீ­னத்­துடன் உடன்­நிற்­கிறோம்’, ‘பலஸ்­தீன இனவ­ழிப்பை நிறுத்­துங்கள்’, ‘ஐக்­கிய நாடுகள் சபையா? அல்­லது நியா­ய­மற்ற நாடுகள் சபையா?’, ‘இலங்­கையே, சரி­யான தரப்பின் பக்கம் நில்’ என்­பன உள்­ள­டங்­க­லாக பலஸ்­தீ­னத்­துக்கு ஆத­ர­வான வாச­கங்கள் எழு­தப்­பட்ட பதா­தை­களை ஏந்­தி­யி­ருந்­தனர்.

அங்கு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களின் சார்பில் கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்­பாட்­டாளர் அருட்தந்தை சக்திவேல், பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்­ ப­டு­கொ­லையை ஒத்­தி­ருப்­ப­தா­கவும், இப்பேரழிவைத் தடுப்­ப­தற்கு பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரான தமது ஒடுக்கு­மு­றை­களை இஸ்ரேல் முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Vidivelli

No comments:

Post a Comment