பொதுமக்களுக்காக பொலிஸார் வழங்கியுள்ள 119 எனும் அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவசர முறைப்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள 119 என்ற இலக்கத்தை உண்மைக்குப் புறம்பான முறைப்பாடுகளை வழங்க பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள பொலிஸார், இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏனைய சேவைகள் மூலம் மக்களின் மேற்படி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்ற போதிலும், இலஞ்சம், காணி விவகாரம், நிதி தகராறுகள் போன்ற வழக்குகள் தொடர்பான முறைப்பாடுகளும் இந்த அவசர அழைப்பு மையத்திற்கு பொதுமக்களால் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
அதனால் அவசர தேவைகளின்போது 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளும் நிலை மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான உண்மைக்குப் புறம்பான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment