மத்திய கிழக்கு மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு, எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுறத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வான் தடைகள் மற்றும் கடல் வழிப் பாதைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டதால், ஸ்தம்பித்திருந்த சர்வதே வர்த்தகம் வழமைக்கு திரும்பியுள்ளதாலே இவற்றின் விலைகளும் குறைந்துள்ளன.
இதன் பிரகாரம் ஒரு பீப்பா பிரெண்ட் மசகு எரிபொருள் சுமார் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது,
இதன்படி, ஒரு பீப்பா பிரெண்ட் மசகு எரிபொருளின் தற்போதைய விலை 67.13 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையை, ஈரான் மூட தீர்மானித்ததினால், உலக சந்தையில் எரிபொருள் விலை நேற்று முன்தினம் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment