ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : முக்கிய இராணுவ புரட்சிப்படை பிரதானி உயிரிழப்பு : மூடப்பட்டது இரு நாடுகளின் வான் பரப்புகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 12, 2025

ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : முக்கிய இராணுவ புரட்சிப்படை பிரதானி உயிரிழப்பு : மூடப்பட்டது இரு நாடுகளின் வான் பரப்புகள்

இன்று (13) அதிகாலை இஸ்ரேல் ஆப்ரேஷன் ‘Rising Lion’ என ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த வான்வெளித் தாக்குதலில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், இராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதலால் ஈரானின் உயர் இராணுவ அதிகாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் முக்கிய இராணுவ புரட்சிப்படை பிரதானி ஹொசைன் சலாமி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஈரானின் முக்கியமான அணு ஆயுத ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல அறிவியல் ஆராய்ச்சியாளர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த தாக்குதலையடுத்து, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என்றும் கூட்டங்கள் நடத்தப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரு நாடுகளின் வான் பரப்புகளும் மூடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என விளக்கமளித்திருக்கிறது. 

ஈரான் அணு மற்றும் யூரேனிய ஆயுதங்களைப் பலப்படுத்தி வருவதால், அது இஸ்ரேலுக்கு ஆபத்தாகிவிடும் என்ற நோக்கில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற போர் பதற்றம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

இஸ்ரேலும், ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த தாக்குதல்கள் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

No comments:

Post a Comment