இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர், இன்று (29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகொன்றுடன் 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யதுள்ளனர்.
அதன்படி, இன்று (29) மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை வடமத்திய கடற்படை கட்டளை பிரிவினர் அவதானித்ததோடு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கையிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்றை சட்ட திட்டத்திற்கு உட்பட்டு இலங்கை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்ற இந்திய மீன்பிடி படகுடன் அதிலிருந்த இந்திய மீனவர்கள் மன்னாரில் உள்ள தால்பாடு படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழையும் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment