மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கந்தர, தலல்ல பகுதியில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பஸ்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த விபத்தில் 35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் மேலதிக சிகச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment