பலாங்கொடை கல்தோட்ட பகுதியில் அமைந்துள்ள மின்சார சபை அலுவலகத்தை ரஜவக பகுதிக்கு இடம் மாற்றுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய கல்தோட்ட மற்றும் அதனை அன்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் இன்று திங்கட்கிழமை (22) கல்தோட்ட மின்சார சபை அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மின்சார சபை அலுவலகத்திற்கு புகுந்தமையால் கல்தோட்ட பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
பொதுமக்கள் அலுவலகம் உள்ளே சென்றதும் அங்கு தலைமை அதிகாரி இல்லாததால் அங்கு கடமையில் இருந்த பெண் அதிகாரி பயந்து ஒழிந்ததை அவதானிக்க முடிந்தது.
தலைமை அதிகாரி அலுவலகத்திற்கு வந்த பின் அங்கு சென்ற நான்கு பேரை குறித்த அதிகாரியுடன் கலந்துரையாட வாய்ப்பளித்துள்ளார்கள்.
கலந்துரையாடலின்போது மின்சார சபை அலுவலக தலைமை அதிகாரி குறித்த அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதனால் இதனை வேறொரு பகுதிக்கு எடுத்து செல்வதாக தெரிவித்ததுடன், தற்போது இருக்கும் அலுவலகத்தில் எமக்கு தேவையான வசதிகளை பெற்று தந்தால் இடமாற்றம் செய்யாமல் இங்கு இருப்பதாக தெரிவித்தார்.
குறித்த மின்சார சபை அலுவலகம் அரச கமநல அபிவிருத்தி சேவை நிலையத்திற்கு சொந்தமான விவசாய நிலத்திலயே இயங்கி வருகிறது. குறித்த அலுவலகத்திற்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து தருவதாக கமநல சேவை திணைக்களம் கடித மூலம் தெரிவித்துள்ள நிலையில்தான் இவர்கள் இங்கிருந்து செல்ல முயற்சிக்கின்றார்கள்.
இவர்கள் தற்போது செல்ல உள்ள இடம் தனியாருக்கு சொந்தமான ஒரு வீடு எனவே இதனை யாரோ பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றதுடன், அவ்வாறு சென்று இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு இவர்கள் முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டார்கள்.
அனைத்து அரச அலுவலகங்களும் கல்தோட்ட பகுதியில் உள்ள போது இதனை மாத்திரம் ஏன் இடமாற்றம் செய்ய முயற்சி செய்கின்றார்கள் என பொதுமக்கள் மேலும் தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment