சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், 10 பில்லியன் தேவை - அனுரகுமார திசநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, July 22, 2024

சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், 10 பில்லியன் தேவை - அனுரகுமார திசநாயக்க

அரசமைப்பின் 22 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க இதற்கு 10 பில்லியனிற்கு மேல் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் இலங்கையர்கள் பெருமளவில் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து அரசமைப்பின் 83 வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை திருத்துவதற்காகவே 22 வது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது.

22 வது திருதத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், இதற்கு பத்து மில்லியன் செலவாகும், மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவர் 10 பில்லியனை செலவிட தயாராகவுள்ளார்.

எனினும் 22 வது திருத்தம் என்பது பல வாரங்கள் நீடிக்கக் கூடிய விடயம் அதற்குள் தேர்தலில் தோல்வியடைந்து ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு சென்றிருப்பார்.

பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சி செய்கின்றார், போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பத்தில் ரணில் உள்ளார்.

ரணில் தனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்குமா? எந்த கட்சியின் சார்பில் போட்டியிடுவது ? எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்ற குழப்பத்தில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment