இலங்கையின் 49ஆவது சட்டமா அதிபராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் பாரிந்த ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, July 12, 2024

இலங்கையின் 49ஆவது சட்டமா அதிபராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் பாரிந்த ரணசிங்க

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) நியமித்துள்ளார்.

அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய அவர், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி. ரணசிங்கவின் புதல்வராவார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.ஏ. பாரிந்த ரணசிங்க இலங்கையின் 49ஆவது சட்டமா அதிபர் ஆவார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment