மூன்று தினங்கள் பாடசாலைகளுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 11, 2024

மூன்று தினங்கள் பாடசாலைகளுக்கு பூட்டு

பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் பதினொரு பாடசாலைகள் மூன்று தினங்களுக்கு மூடப்படவுள்ளன.

இம்மாதம் 18 முதல் 20 வரை இப்பாடசாலைகளை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

விவேகானந்த மகா வித்தியாலயம், அநுராதபுரம் மத்திய வித்தியாலயம், ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவத்தகசேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸபுர மகா வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம், மிஹிந்தலை கம்மலக்குளம வித்தியாளயம், தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மூடப்படவுள்ளன. 

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களிலிருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க இந்த பாடசாலைகள் மூடப்படுகிறன.

No comments:

Post a Comment