கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில், அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை அடுத்த செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் காலத்தை வீணடிக்காது அதனை பிரயோசனப்படுத்தும் வகையில், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவு பெற்றதும் உயர்தர பரீட்சையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழக அனுமதியை விரைவு படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நிறைவு பெற்றதும் உடனடியாகவே உயர்தர பரீட்சைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் பல்கலைக்கழக நுழைவை விரைவு படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் காலத்தை விரயம் செய்யாமல் அதனை பிரயோசனப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment