சந்தையில் கோழி இறைச்சி வாங்குவதில் கவனம் தேவை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 11, 2024

சந்தையில் கோழி இறைச்சி வாங்குவதில் கவனம் தேவை

கோழி இறைச்சியை சந்தையில் கொள்வனவு செய்யும்போது, அவதானத்துடன் செயல்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் தொழிலாளர் சங்கம் கேட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் காரணமாக கோழி இறைச்சி முதலானவற்றின் தூய்மைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதாலேயே அச்சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

ஏராளமான கோழிப் பண்ணைகள் நீரில் மூழ்கியதால், கோழிகள் உயிரிழந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

வெள்ள நீரில் எலிக்காய்ச்சல் போன்ற பல்வேறு வைரஸ்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இதனால் வைரசுகளால் கோழிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

கோழிப் பண்ணைகளிலுள்ள கணிசமான எண்ணிக்கையிலான கோழிகள் வெள்ளத்தினால் அடிக்கடி இறப்பதாகவும் செயலாளர் அஜித் ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.

கோழி இறைச்சி விற்பனைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், வெள்ளம் காரணமாக இறந்த கோழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செயலாளர் அஜித் ஜயசுந்தர கூறினார்.

‘விற்பனைக்காக வைக்கப்டடிருக்கும் கோழி இறைச்சி, அதன் தலைகள் தோல் அகற்றப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்படக்கூடும். 

இருப்பினும் தோலில் சிவப்பு நிறம் கொண்ட கோழி இறைச்சி வெள்ளத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக இருக்கலாமென்றும் அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சில, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இத்தகைய சிவப்பு நிற கோழிகளை தமது சங்கம் அவதானித்ததாகவும் ஜெயசுந்தர குறிப்பிட்டார்.

Meatballs மற்றும் Sausages தயரிப்பதற்காக இவ்வாறு பல்வேறு விலங்குகளின் இறைச்சி அனுப்பப்படுவதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment