தோல்வி கண்ட நாடு ஜனாதிபதி ரணிலினாலேயே மீண்டெழுந்தது : வெளிநாடுகள் பல உதவ அவரே காரணம் என்கிறார் குமரகுருபரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 18, 2024

தோல்வி கண்ட நாடு ஜனாதிபதி ரணிலினாலேயே மீண்டெழுந்தது : வெளிநாடுகள் பல உதவ அவரே காரணம் என்கிறார் குமரகுருபரன்

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிலைநாட்ட முன்வரத் தவறியவர்கள், இப்போது மக்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டையும் காப்பாற்ற தேச பக்தர்கள் என்ற தகுதியுடன் முன்வந்த தேசப்பற்றுள்ள திறமையான தலைமைக்கு எதிராக போராடுவது கேலிக்குரியதென கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

மக்களை காப்பாற்ற பொருளாதார நெருக்கடி மேலாண்மைக்கான சர்வதேச உதவியை திசை திருப்ப முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பு வர்த்தக மாணவர் சங்கத்தின் (CCSU) மாதாந்த கருத்தரங்கிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம் என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான செயல்களின் தொகுப்பாக வரையறுக்கப்படுகிறது. தண்ணீர், உணவு, தீவனம், மருந்து, தங்குமிடம், உடை போன்றவற்றை பாதுகாப்பது போன்ற செயல்களில் அடங்கும். 

இவை எல்லாம் அதள பாதாளத்தில் வீழ்ந்து இருந்தபோது நாட்டை மீட்ட ஒரே தனி மனிதர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. வாக்குரிமையை பயன்படுத்துவது போன்ற ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க மக்கள் வாழ வேண்டும். வாழ வைத்தவர் யார்? 

ஜனாதிபதியாக பதவியேற்க அழைக்கப்பட்டபோது இந்தத் தலைவர்கள் எங்கே இருந்தனர். மக்களின் வாழ்வாதாரத்தின் காலத்தின் தேவையை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான பரிமாணத்தில் தமக்கு எந்தத் திறனும் இல்லை என்று அவர்களே உறுதியாக நம்பினர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன் வந்திருக்காவிட்டால் இந்த தோல்வியுற்ற தேசத்துக்கு உலக நாடுகள் உதவ முன்வந்திருக்க தயாராக இருக்கவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை, நாட்டை தோல்வியுற்ற நாடாக மாற்றியிருந்தால் அத்தகைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் நேரடியாக பொறுப்பு என்பதும் மறக்க மறுக்க முடியாத கருத்தாகும்.

மக்களின் வாழ்வுரிமைக்கு ஆதரவளிக்க சர்வதேச உதவி கிடைக்காததால் ஜனாதிபதியாக பதவியேற்க பயந்தவர்கள் இப்போது தேர்தலுக்கு செல்வதற்காக நாட்டை மீட்டெடுப்போம் என ஜனநாயக உரிமையை வலியுறுத்துகின்றனர்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வென்றெடுத்த மக்களின் வாழ்வாதாரத்துக்கான சர்வதேச உதவி மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆகியவை இவர்களால் காப்பாற்றப்படுமென்று ஜனாதிபதி தெரிவில் சில அரசியல்வாதிகளின் விளிம்பு நிலை நன்மைகளுக்கு திசை திருப்பப்படுவதில் நம்பிக்கை கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment