ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கும் ‘நிதஹஸ ஜனதா சபாவ’ (சுதந்திர மக்கள் காங்கிரஸ்) உறுப்பினர்களுக்கும் இடைய கூட்டணி அமைப்பதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ். குமாரசிறி, (வைத்தியர்) உபுல் கலப்பத்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.
No comments:
Post a Comment