முன்னாள் கணக்காளர் போதைப் பொருளுடன் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 23, 2024

முன்னாள் கணக்காளர் போதைப் பொருளுடன் கைது

பாறுக் ஷிஹான்

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம், பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மையில் ஐஸ், கஞ்சா போதைப் பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் கைதான சந்தேக நபரொருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது, ஐஸ் போதைப் பொருள் 840 மில்லி கிராம், கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றிய 39 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் பெரியநீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், குறித்த சந்தேநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment