யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமாங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கண்ணகி அம்மனை வழிபடும் பொருட்டு புடவை ஒன்று ரூ.16 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்த இருந்த இந்த சேலை, 16 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு, கடவுள் சிலைக்கு காணிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
பெருமளவு உள்ளூர் மற்றும் புலம்பெயர் பக்தர்கள் பங்கேற்புடன் நேற்று முன்தினம் (22) புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இடம்பெற்றது.
அந்த வகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது.
அதில் சேலை ஒன்றுக்கு ரூ.16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் வாங்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment