தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடும் பணம் காசா சிறுவர் நலனுக்கு : வங்கி கணக்கிலக்கம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2024

தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடும் பணம் காசா சிறுவர் நலனுக்கு : வங்கி கணக்கிலக்கம் அறிவிப்பு

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தங்களின் நன்கொடைகளை 11.04.2024 க்கு முன்னர், இலங்கை வங்கியின் (7010), தப்ரோபன் (747) கிளைகளில் 7040016 எனும் கணக்கு இலக்கத்திற்கு “ஜனாதிபதியின் செயலாளர்” என்ற பெயரில் வைப்பிலிடுமாறும், அதற்கான பற்றுச்சீட்டை 077 9730396 எனும் இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment