யாழ்ப்பாணத்தில் தொடரும் ஆபத்தான பயணங்கள் : இரு உயிரிழப்புக்களின் பின்னரும் மக்களின் அலட்சியப்போக்கு - News View

About Us

About Us

Breaking

Monday, February 26, 2024

யாழ்ப்பாணத்தில் தொடரும் ஆபத்தான பயணங்கள் : இரு உயிரிழப்புக்களின் பின்னரும் மக்களின் அலட்சியப்போக்கு

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பஸ்ஸின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும், பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த இ.போ.சபை பஸ்ஸில், மிதிபலகையில் தொங்கியவாறு பயணிக்கும்போது, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகளை ஒருவர் கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பஸ்ஸை நிறுத்த முதல், பெண்ணொருவர் இறங்க முற்பட்டவேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

அதேவேளை கடந்த 23ஆம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரு உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்ற நிலையிலும், ஆபத்தான மிதிபலகை பயணத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment