தொடர்ந்து பல சர்ச்சைகளில் டொனால்ட் டிரம்ப் சிக்கினாலும் அவருக்கான ஆதரவு அமெரிக்க மண்ணில் பெருகிக் கொண்டே செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் (2024) இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களமும், பிரசாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு பெரும் காட்சிகளில் இரு பெரும் துருவங்களாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரப் இருவரும் போட்டியிடுகிறார்கள்.
இதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதிலும் டிரம்பிற்கு மேலும் மேலும் ஆதரவு பெருகுவதற்கான காரணம் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், நாட்டுப்பற்றை முக்கிய ஆயுதமாக டிரம்ப், கையில் எடுத்திருப்பது அவருக்கான ஆதரவினை பன்மடங்காக பெருக்கியுள்ளது.
உதாரணமாக அமெரிக்காதான் உலக நாடுகளை வழிநடத்த முடியும் என்ற தொனியில் தான் டிரம்ப் பிரசாரம் செய்வார், அது நாட்டுப்பற்று அதிகம் இருக்கும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்தும் இலகுவாக தங்கள் ஆதரவை அளிப்பார்கள்.
அடுத்து பழமைவாதிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதில் டிரம்ப் இற்கு நிகர் எவருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாகப் புலம்பெயர்வைத் தடுக்க கடுமையான சட்டங்கள், மெக்சிக்சோ மக்கள் மீதான வெறுப்பு, குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பயங்கரவாதத்துடன் இணைத்துப் பேசுவது ஆகியவற்றுக்கு கண்டனம் கடுமையாக இருந்தாலும், அது பழமைவாதிகளை டிரம்ப் ஆதரவாளர்களாக மாற்றுகிறது.
சில வழக்குகளில் கைதான டிரம்ப் அவர் மீது விசாரணை மற்றும் விமர்சனங்களைக் கூட தனக்கான ஆதரவாக மாற்றுகிறார்.
"அதாவது அமெரிக்கா மீண்டும் முதன்மையான இடத்திற்குச் செல்லக்கூடாது என்று சிலர் விரும்புவதாகவும் அவர்களே திட்டமிட்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்வதாகவும் விமர்சித்தார்" இதுவும் அவருக்கான ஆதரவை அதிகரித்தது.
அமெரிக்கப் பொருளாதார நிலை அந்நாட்டு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கே வேலைவாய்ப்பின்மை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதாகவும் ஜோ பைடன் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால், பொதுமக்களுக்கு விலைவாசி உயர்வே மிகப்பெரிய சிக்கலாகத் தெரிகிறது. இதனால் வட்டி விகிதம் அதிகரிக்கும் நிலையில் இருப்பதால், மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனை சரியாக சுட்டிக்காட்டி தனக்கான ஆதரவை டொனால்ட் டிரம்ப் பெருக்கிக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் அயோவா (Iowa) மாகாணத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதுள்ள அதிபரின் பதவிக் காலம் இவ்வாண்டுடன் நிறைவடைவதால், எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும்.
பிரதானமாகவுள்ள இரண்டு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னாள் அதிபர் ட்ரம்ப், இந்திய வம்சாவளியை சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இதில் அயோவா மாகாண தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ட்ரம்ப்.
அயோவா தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
ப்ளோரிடா ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத வாக்குகளுடன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார்.
தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 19% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளும், அர்கான்ஸஸ் முன்னாள் ஆளுநர் அஸா ஹட்ஷின்சன் 0.2% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment