தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும் : வலியுறுத்தும் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 26, 2023

தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும் : வலியுறுத்தும் அமைச்சர் டக்ளஸ்


மாணவர்கள் இலகுவாக புரிந்து கொண்டு பின்பற்றக் கூடிய வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மத்திய கல்லூரியின் கீதம் தமிழ் மொழிக்கு மாற்றப்படுவதுடன் ஏனைய தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டுமென்பதே தன்னுடைய எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் (ஸ்மார்ட்) வகுப்பறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி கற்ற காலத்தில் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் கல்லூரி கீதத்தை மனனம் செய்து பாடியதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment