புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் : தமது கோரிக்கைகளை எடுத்துக்கூறி ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 27, 2023

புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் : தமது கோரிக்கைகளை எடுத்துக்கூறி ஆர்ப்பாட்டம்

விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களாகிவிட்டதை நினைவுகூரியும், தமக்கான நஷ்டஈட்டை வழங்குமாறு கோரியும் புத்தளத்தில் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மக்கள் மறுமலர்ச்சி முன்னனி கட்சியின் தலைவரால் புத்தளம் - கொழும்பு வீதியின் ரத்மல்யாய பகுதியில் ஜும்ஆத் தொழுகை முடிவடைந்த பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 33 வருடங்களாகியும் காலங்காலமாக மாறி வருகின்ற அரசாங்கங்களினால் தமக்கு நன்மையான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தும், தாம் இழந்தவைக்கான நஷ்டஈட்டை வழங்குமாறு கோரியும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது தமது கோரிக்கைகளை எடுத்துக்கூறியும், கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment