இலங்கையில் பக்கவாத நோயினால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, அந்நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணரும், தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவருமான ஹர்ஷ குணசேக்கர தெரிவித்துள்ளார்.
நாட்டில் 25 வயதை கடந்துள்ள நான்கு பேரில் ஒருவர், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டால், அவர்களில் 25 வீதமானவர்களுக்கு மீண்டும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஹர்ஷ குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் சுமார் 200,000 பக்கவாத நோயாளிகள் இருப்பதாகவும், 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த இதற்கான பிரிவுகள் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முகத்தின் ஒரு பக்கம் இழுப்பது, வார்த்தைகளில் தடுமாற்றம், கை அல்லது காலில் உணர்வு இழப்பது போன்ற உணர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
மேலும், இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதிக மருந்துகளை உட்கொள்ளாமல் மருந்துவர்களிடம் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசேட மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவிக்கையில், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment