(எம்.மனோசித்ரா)
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் இரண்டு தடவைகள் நீர்த்தரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள கிரீன் பாத் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை (27) கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தாமரை தடாகத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக இவ்வாறு பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக இன்று மாலை தாமரை தடாகம் முதல் பொது நூலகம் வரையான வீதிகள் மூடப்பட்டிருந்தன.
தனியார் கல்வி நிறுவனங்களான லைசியம், தேசிய வணிக முகாமைத்துவக் கல்லூரி போன்றவற்றுடன் இணைந்து சதி செய்து நாட்டின் இலவசக் கல்வியை அழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி மருத்துவ பீட மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment