இலங்கையில் குழந்தைகளுக்கான மிக முக்கியமான விசேட வைத்தியர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் ஒரேயொரு குழந்தைகளுக்கான கதிரியக்க சிகிச்சை நிபுணரே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனை விசேட வைத்தியர் சங்கத்தின் வைத்தியர் அசோக் குணரட்ண தெரிவித்துள்ளார்.
2024 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் 4000 விசேட வைத்திய நிபுணர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 2000 பேரே உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்களுக்கான ஓய்வூதிய வயது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு காரணமாக எஞ்சியுள்ள 50 வீதமான வைத்தியர்களில் 250 பேரை இழக்க வேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் 1750 விசேட வைத்தியர்களே காணப்படும் நிலைமை உருவாகும் என தெரிவித்துள்ள அவர் அவசர மருத்துவ பிரிவைச் சேர்ந்த 30 வைத்தியர்களுக்கு விசேட வைத்தியர்கள் பயிற்சியை வழங்கினோம். ஆனால் அவர்களில் 20 பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2024-25 இல் நாட்டிற்கு 289 மயக்க மருந்து நிபுணர்கள் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் 155 பேரே எஞ்சியிருப்பார்கள் 30 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். 60 வயதானவர்கள் ஓய்வு பெற்றால் 20 பேர் மாத்திரமே எஞ்சுவார்கள் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் 100 விசேட வைத்தியர்களும், மயக்க மருந்து நிபுணர்களும் எஞ்சியிருப்பார்கள் என சொல்வது துரதிஸ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரேயொருவர் குழந்தைகள் தொடர்பான கதிரியக்க நிபுணராக இருந்தார். அவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.
கேசரி
No comments:
Post a Comment