தொழில்நுட்பக் குழுவை அமைத்தே உறுதிப்படுத்த வேண்டுமே தவிர ஊடக களியாட்டங்களாலல்ல - வைத்திய தொழில் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

தொழில்நுட்பக் குழுவை அமைத்தே உறுதிப்படுத்த வேண்டுமே தவிர ஊடக களியாட்டங்களாலல்ல - வைத்திய தொழில் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து காரணமாகவா நோயாளர்கள் மரணிக்கிறார்கள் என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது, தொழில்நுட்ப குழுவொன்றை அமைத்து அது வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலாகும். மாறாக ஊடக களியாட்டங்கள் ஊடாக அல்ல. அத்துடன் தற்போது வரை மரணமடையக் கூடிய அல்லாத நோயாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் நியாயமற்ற முறையில் மரணித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாது என சிவில் உரிமைகள் தொடர்பான வைத்திய தொழில் சங்க கூட்டணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் ஏற்றப்படும் மயக்க மருந்து தொடர்பாக பலராலும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மற்றும் மயக்க மருந்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் ஊடக சந்திப்புகளை நடத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் பேராதனிய வைத்தியசாலையில் இடம்பெற்ற எதிர்பாராத மரணங்களுக்கு தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து பொருட்களா காரணம் என்பதை தேடிப்பார்க்க தொழிநுட்க் குழு அமைத்து, அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே அது தொடர்பில் தீர்மானத்துக்கு வர வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஊடக களியாட்டங்களை நடத்தி தெரிவிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக் கொண்டு உறுதிப்பாட்டுக்கு வர முடியாது.

அத்துடன் தற்போது வரை மரணமடையக் கூடிய அல்லாத நோயாளர்கள் குறிப்பிடத்தக்களவில் நியாயமற்ற முறையில் மரணித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாத காரணமாகும்.

மேலும் மயக்க மருந்து தொடர்பாக தொடர்ந்தும் வைத்தியர்கள் ஒரு சில கருத்துக்களை வெளியிட்ட பின்னர் தற்போது பயன்படுத்திய தடுப்பூசியை பாவனையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக இந்தியாவில் இருந்து புதிதாக கொண்டுவருவதாக தெரிவிக்கப்படும் தடுப்பூசி முறையான பரிசோதனையின் பின்னரா கொண்டு வரப்படுகிறது என கேட்கிறோம்.

மேலும் அரச வைத்தியசாலைகளில் நிலவி வரும் பாரிய மருந்து தடுப்பாட்டுக்கு மத்தியில் தரமற்ற மருந்து வகைகளை கொண்டுவருவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெறுமதிமிக்க உயிர்கள் அழிந்த பின்னர் அதற்கு பல்வேறு காரணங்களை தேடிக் கொண்டு ஊடக சந்திப்புக்களை நடத்து வேண்டி ஏற்பட்டாலும். அதில் இருந்து முடிவடையாமல் ஒட்டு மொத்த சுகாதார துறையும் வீழ்ச்சியடையும் என்றார்.

No comments:

Post a Comment