மருந்து தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பேராதனை மருத்துவமனையில் இளம் பெண் உயிரிழந்தமைக்கு மருந்து தட்டுப்பாடே காரணம் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் ஆளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு காரணமாக அதிகாரிகள் தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்கின்றனர். நோயாளர்களின் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில மருத்துவமனைகள் புரொபோல் என்ற மருந்தினை பயன்படுத்துகின்றன. இந்த மருந்து கடும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது என பல மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன எனவும் ந நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வகை மருந்து குறித்து மே மாதம் 15 ஆம் திகதி ஹோமாஹம மருத்துவமனை அறிவித்துள்ளது. ஆனால் நடவடிக்கைகள் எதனையையும் சுகாதார அமைச்சு எடுக்கவில்லை.
இதேகாலப்பகுதியில் தெல்தெனிய, மாத்தறை மருத்துவமனைகளும் இந்த மருந்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளன, பேராதனை மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் இந்த மருந்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்படும் வரை எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவது மற்றும் சத்திர கிசிச்சை செய்துகொள்வது குறித்து மக்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசாங்க மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment