அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கம் : மாவட்ட செயலக வாயிலை மூடி மக்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 28, 2023

அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கம் : மாவட்ட செயலக வாயிலை மூடி மக்கள் போராட்டம்

சண்முகம் தவசீலன்

அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (28) காலை கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாககூடி மாவட்ட செயலக வாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கேப்பாபிலவு மக்கள் அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வாசலை மறித்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது மாவட்ட செயலக நுளைவாயிலில் பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்கா அதிபர் க.கனகேஸ்வரன் வாசலில் செல்லும்போது அவரை மறித்து தங்கள் ஆதங்கத்தினை மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அரசின் உதவித்திட்டம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கருத்தினையும் மக்களின் சொந்த காணிகள் இதுவரை விடுவிக்கப்பாடாத நிலையில் அரசின் இந்த உதவித்திட்டமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினை மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாவட்ட செயலக வாசலை மறித்த மக்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்துரையாடிய பின்னர் குறிப்பிட்டவர்களை மாவட்ட செயலக மண்டபத்திற்கு அழைத்துச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் மக்களை முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment